<p><b>சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்&nbsp; தட்டார்மடத்தில்&nbsp; &nbsp;நடைபெற்றது.</b><br></p><p>சாத்தான்குளம் தெற்கு&nbsp; ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்&nbsp; தட்டார்மடம் ஸ்ரீபலவேசக்காரன் சுவாமி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி உழவாரப்பணி மேற்கொள்வது. அகண்ட பாரதம்&nbsp; சபதம் ஏற்பு நாள் நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனைக்கப்பட்டது.&nbsp;</p><p>இதில் தெற்கு ஒன்றிய தலைவராக ஜெயசிங், ஒன்றிய பொது செயலாளர் மாயவனம் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கலியமுத்து செல்வ முத்துக்குமார், ஒன்றிய&nbsp; பொருளாளர்&nbsp; &nbsp;ஐயப்பன் முத்து, ஒன்றிய துணைத் தலைவர்கள் இசக்கிமுத்து, மாரிமுத்து, ஒன்றிய செயற்குழு உறுப்பினராக முத்துக்குமார், செல்வகுமார், சங்கர்&nbsp; தட்டார் மடம் கிளை தலைவர் மாரியப்பன் உள்ளிட்ட&nbsp; பல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு பஞ்சாயத்திற்கு ஒரு பொறுப்பாளர் என ஒன்பது கிராமத்திற்கு பொறுப்பாளர்கள்&nbsp; நியமனம் செய்யப்பட்டனர்.&nbsp;</p><p>இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்தர், இணையதள மாவட்ட பொறுப்பாளர் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் திவான், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன்&nbsp; உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>