<p><b>இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் விழாவை&nbsp; முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது நினைவு கோட்டையில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பாஞ்சாலங்குறிச்சி அமைந்துள்ளது. இங்குள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டையில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று கட்டபொம்மனின் விழாவும், அவரது&nbsp; குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய திருவிழாவும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.</p><p><br></p><p>அதே போல இந்த ஆண்டும் கொண்டாப்படும் இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் விழாவை&nbsp; முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பாஞ்சாலாங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவச்சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p><p><br></p><p>இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.மதன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வீரசக்கதேவி ஆலக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.</p>