தூத்துக்குடியில் காரில் மது விற்றவர் கைது - மது பாட்டில்கள் பறிமுதல்
நிருபர்
May 31, 2021
தூத்துக்குடியில் காரில் மது விற்றவர் கைது - மது பாட்டில்கள் பறிமுதல்
<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடியில் காரில் மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்து , அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.</b><br></p></div><div align="left">
<p dir="ltr">கொரோனா ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊரடங்கு காலத்தில் மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வ<u>ருகின்றனர்</u>. </p>
<p dir="ltr">இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். </p>
<p dir="ltr">அப்போது, தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவில், அதே பகுதியை சேர்ந்த கற்குவேல் மகன் சரவணக்குமார் (வயது 40) என்பவர் காரில் வைத்து சட்டவிரோ தமாக மதுவிற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக காவலர்கள் சரவணக்குமாரை கைது செய்தனர். </p><p dir="ltr">அவரிடம் இருந்து 165 மதுபாட்டில்களையும், மது விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.</p></div>