<p><b>தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, ஹரிஸ்மா கோல்டு பைனாஸ் உரிமையாளர் திருச்சிற்றம்பலம் சார்பில் நாளை ( மே 12 ) 4000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. </b></p><p><br></p><p>தூத்துக்குடி வடக்கு ரத வீதி முத்தாரம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள்  நடைபெறுகிறது. அம்மனுக்க சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாரதனைகள், நடந்து வருகிறது. இன்று ( மே 11 ) இரவு 8 மணிக்கு மாகாப்பு தீபாரதனை நடைபெற்றுகிறது. நாளை ( மே 12 ) காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு பால்குடம், 10.30 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றுகிறது.</p><p><br></p><p>அதனைத்தொடர்ந்து ஹரிஸ்மா கோல்டு பைனான்ஸ் உரிமையாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 4000 பேருக்கு மகா அன்னதானம் நடைபெறுகிறது.இதில், நான்கு வகை கூட்டு பொரியல், பாயசம், அப்பளம், வடை, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், தண்ணீர் பாட்டிலுடன் அன்னதானம் நடக்கிறது. அன்னதானமானது மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக நடக்கிறது.</p><p><br></p><p>இந்த அன்னதானத்தில் பொதுமக்கள் பக்தர்கள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.</p>