<p><b>11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.</b></p><p><br></p><p>கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கயத்தாறு முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சந்தனகுமார் (19) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.</p><p><br></p><p>இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி&nbsp; சுரேஷ்&nbsp; இன்று (4.12.2024) குற்றவாளியான சந்தனகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.</p><p><br></p><p>இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்&nbsp; பத்மாவதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர்&nbsp; முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர்&nbsp; லட்சுமி மற்றும் காவலர்&nbsp; முருக லெட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்&nbsp; ஆல்பர்ட் ஜான்&nbsp; பாராட்டினார்</p>