மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : நல வாரிய இறப்பு நிதியுதவி திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,70,000க்கான காசோலை வழங்கல்!
நிருபர்
November 01, 2021
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (01.11.2021) நடைபெற்றது.
<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று (01.11.2021) நடைபெற்றது.</b></span><br></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொது மக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">மேலும், முதலமைச்சரின் தனி பிரிவு மனுக்கள் மற்றும் நீண்ட நாள் மனுக்களுக்கு தனி கவனம் செலுத்தி மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார்கள்.</span></p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரிய இறப்பு நிதியுதவி திட்டம் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1,70,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், வழங்கினார்.</span></p><p dir="ltr">
<span style="font-size:16px" ;="">கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது அமுதா, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் வீரபத்திரன், உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.</span></p>