<p><b>சேவைக் குறைபாடு காரணமாக தொலைக்காட்சி பழுது பார்ப்பவர் ரூ.15ஆயிரம் இழப்பீட்டை வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி காலனியைச் சார்ந்த கனகராஜ் என்பவர் டூவிபுரத்திலுள்ள ஒரு தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைக்காரரிடம் தனது தொலைக் காட்சியில் எல்.இ.டி.&nbsp; ஸ்கிரீனில் பிரச்சினை இருப்பதாகவும், அந்த பழுதை சரி செய்து தருமாறும் கேட்டுள்ளார்.&nbsp;</p><p>அதற்கு ரூ.4000 செலவாகும் எனக் கூறி கடைக்காரர் அந்த தொகையை பெற்றுள்ளார். ஆனால் பல மாதங்களாகியும் பழுது நீக்கித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால்&nbsp; மன உளைச்சலுக்கு ஆளான கனகராஜ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட&nbsp; நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.&nbsp;</p><p>வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர்,&nbsp; நமச்சிவாயம் ஆகியோர் பழுதான தொலைக்காட்சியில் எல்.இ.டி.&nbsp; ஸ்கிரீனில் உள்ள பழுதை நீக்கி ஒப்படைக்க வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு&nbsp; நஷ்ட ஈடு தொகை ரூ.10,000 மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆகியவற்றை இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.</p>