<p><b>தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்&nbsp; முதலுதவி மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.</b></p><p>உலக மீனவர்கள் தினத்தை முன்னிட்டு&nbsp; தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில்&nbsp; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதலுதவி மையத்தை திறந்து வைத்து, ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்ததுடன், மீனவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தனித்திறன் போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் விசைப்படகு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/11/21/11700576683.jpg" style="width: 100%;"><br></p><p>இவ்விழாவில் மாநகர திமுக செயலாளர்&nbsp; ஆனந்தசேகரன், துணை மேயர்&nbsp; ஜெனிட்டா செல்வராஜ், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர்&nbsp; நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர்&nbsp; டேனியல், தொழிலதிபர்&nbsp; பழரசம் விநாயகமூர்த்தி, முன்னாள் பேராசிரியை&nbsp; பாத்திமா பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>