<p><b>தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.</b></p><p><b><br></b></p><p>தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி&nbsp; தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கும் இலவச சீருடை, பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவ - மாணவிகளுக்கு இலவச சீருடைகளை வழங்கினார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/06/02/11748842346.jpg" style="width: 100%;"><br></p><p>நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி, திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p>