பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் 4 மாணவர்கள் முறைகேடு?
நிருபர்
December 02, 2020
பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் 4 மாணவர்கள் முறைகேடு?
<p><b>பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட நான்கு மாணவர்களிடம் முறையான இருப்பிட சான்றுக்கான ஆவணம் இல்லாததால் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.<br></b></p><p>அந்த மாணவர்கள், தாசில்தாரின் இறுதி கையெழுத்திட்ட சான்றிதழை கொடுக்காமல், கிராம நிர்வாக அலுவலரிடம் இருப்பிடத்துக்கான சான்றிதழை பெற்றுள்ளனர்.<br></p><p>அதன் காரணமாக சான்றிதழ்களை சரிபார்த்த 5 பேர் கொண்ட குழுவினரின் சட்ட ஆலோசனைப் படி 4 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.<br></p><p>கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள் போலியான சான்றிதழ் அல்லது முறைகேடு செய்திருந்தால் மட்டுமே சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்தார். <br></p>