<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தவர்&nbsp; போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.</b></span><br></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">அசாம் மாநிலம் மங்கட் டாய் மாவட்டத்தைச் சேர்ந்த முனாப் அலி மகன் அலிமுதீன் (25) என்பவர் கோவில்பட்டியில் தங்கி வேலை செய்து வருகிறார்.&nbsp; இவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள் ளார்.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாக குமாரி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அலிமு தீனை கைது செய்து சிறையில் அடைத்தார்.</span></p>