<p><b>தூத்துக்குடியில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரையும் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்</b></p><p>தூத்துக்குடி பொன் சுப்பையா நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் செல்வகணேஷ் (29) என்பவர் கடந்த 19.06.2021 அன்று தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு ட்பட்ட ஒரு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.</p><p>இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் நடந்த விவரத்தை தெரிவித்ததின் அடிப்படையில் சிறுமியின் தாயார் மேற்படி செல்வகணேஷிடம் கேட்டபோது சிறுமியின் தாயாரையும் செல்வ கணேஷ் தாக்கியுள்ளார்.</p><p>இதனையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழும், பெண்ணை தாக்கி கொடுங்காயம் ஏற்படுத்தியதற்காகவும் வழக்குப்பதிவு செய்து&nbsp; செல்வகணேசை தேடி வந்தனர்.</p><p>இந்நிலையில் தூத்துக்குடி தென்பாகம் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று மேற்படி நபரான செல்வகணேசை கைது செய்தனர்.</p><p>இது குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>