தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இதுவரை ரூ.2 கோடி நன்கொடை வந்துள்ளது!
நிருபர்
June 07, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இதுவரை ரூ.2 கோடி நன்கொடை வந்துள்ளது!
<div align="left"><p dir="ltr"><b>தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நிவாரணத்துக்காக இதுவரை ரூ.2 கோடி நன்கொடை பெறப்பட்டு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.</b><br></p></div><div align="left">
<p dir="ltr">இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-</p>
<p dir="ltr">தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடைகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.</p>
<p dir="ltr">இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வணிகர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர், சுயதொழில் செய்பவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆக மொத்தம் 71 பேர் ரூ.2 கோடியே 6 லட்சத்து 45 ஆயிரத்து 961 நன்கொடை வழங்கி உள்ளனர். </p><p dir="ltr">இந்த நிவாரணத் தொகையை வங்கி காசோலை, வரைவோலை, பணமாக தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.</p></div>