கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என இருக்காதீர்கள்… ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
நிருபர்
May 30, 2021
கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என இருக்காதீர்கள்… ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
<div align="left"><p dir="ltr"><b>ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்களுக்கான மாத தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிடிவி வலியுறுத்தியுள்ளார்.</b></p></div><p dir="ltr">
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் : </p><p dir="ltr">ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது. </p><p dir="ltr">ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.</p><p>
</p><p dir="ltr">தமிழக முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களும் ‘கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது’ என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத்தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.</p>