<p>விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.<br></p><p>அதனைத் தொடர்ந்து, விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், 30 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.</p><p>இந்த ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.</p><p><br></p>