தூத்துக்குடியில் பரபரப்பு : சோபாவிற்கு அடியில் பதுங்கல்... அடுத்து நடந்தது என்ன?
நிருபர்
April 24, 2026
தூத்துக்குடி அருகே மறவன்மடம் பகுதியில் வீட்டின் சோபாவிற்கு அடியில் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப்பாம்பை சிப்காட் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகப் பிடித்தனர்.
<p><b>தூத்துக்குடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.</b></p><p><b><br></b></p><p>தூத்துக்குடி அடுத்த மறவன்மடம், திரவியபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இன்று இவரது வீட்டின் வரவேற்பு அறைக்குள் திடீரென பாம்பு ஒன்று புகுந்தது. சோபாவின் அடியில் பாம்பு பதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினர்.</p><p><br></p><p>இதுகுறித்து உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சோபாவின் அடியில் மறைந்திருந்த 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை வீரர்கள் எவ்வித காயமுமின்றி லாவகமாகப் பிடித்தனர்.</p><p><br></p><p>மீட்கப்பட்ட பாம்பு, பின்னர் பாதுகாப்பான முறையில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து அந்தத் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில்:</p><p><br></p><p> "தற்போது கோடை காலம் மற்றும் மழைக்கால மாற்றங்களால் பாம்புகள் குடியிருப்புக்குள் நுழைய வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் வீட்டின் உட்புறத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற கழிவுப் பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டாம்," என வேண்டுகோள் விடுத்தார்.</p>