திருச்செந்தூர் தொகுதிக்குள் செல்லும் இடமெல்லாம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு வலுக்கும் எதிர்ப்பு... ஓட்டு சேகரிக்க முடியாமல் தவிப்பு!
நிருபர்
April 07, 2026
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியில் உள்ளார்.
<p><b>பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிர்ச்சியில் உள்ளார்.</b> </p><p><br></p><p>திருச்செந்துார் தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன், கள்விளை என்ற கிராமத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அவரது வாகனத்தை, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர். </p><p><br></p><p>இந்நிலையில், கோட்டூர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, பிரசார வாகனத்தில் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை, 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். அமைச்சரின் சமாளிப்பை ஏற்காத மக்கள், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, அந்த பகுதியில் பிரசாரம் செய்யாமல், அங்கிருந்து கிளம்பி சென்றார்.</p><p><br></p><p>தொகுதிக்குள் சேகரிக்க ஓட்டு செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அனிதா ராதாகிருஷ்ணன், அவரது ஆதரவாளர்கள் பரிதவித்து நிற்கின்றனர்.</p>