தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2 லட்சம் பறிமுதல்!
நிருபர்
March 14, 2021
தூத்துக்குடியில் உரிய ஆவணமில்லாத ரூ.2 லட்சம் பறிமுதல்!
<p><b>தூத்துக்குடி அருகே உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்</b>.</p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புகுழுவினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.</p><p> இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி அடுத்த மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.</p><p>அப்போது, அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது, காரில் 2 லட்சத்து ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்செல்வது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்துபோது, பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது.<br></p><p>இதனை அடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பணத்திற்கான ஆவணங்களை அளித்துவிட்டு, அதனை பெற்றுச்செல்லும்படி வாகன ஓட்டியிடம் அறிவுறுத்தி அனுப்பினர்.<br></p>