<p><b>தூத்துக்குடி மாவட்டம் மற்றும் தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்பு மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில்&nbsp; கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.&nbsp; திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தாமிரபரணி ஆற்றில் வரும் வெள்ள உபரி நீரின் அளவு மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.&nbsp;</b></p><p><b><br></b></p><p>இன்று பிற்பகல் 6 மணி நிலவரப்படி,&nbsp; மருதூர் அணைக்கட்டில் 11.8 அடியும்,&nbsp; திருவைகுண்டம் அணைக்கட்டில் 11.6 அடியும்,கோரம்பள்ளம் அணைக்கட்டில் 1.7 மீட்டரும் நீர்மட்டம் உள்ளது.&nbsp;</p><p><br></p><p>மேலும், மருதூர் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 32,209 கன அடியும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 28,450 கன அடியும் தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.&nbsp; கோரம்பள்ளம் அணைக்கட்டில் இருந்து சுமார் 3000 கன அடி உபரி நீர் உப்பாத்து ஓடையில் வெளியேற்றப்படுகிறது.&nbsp;</p><p><br></p><p>மேலும், நாளை (25.11.2025) திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதால் தாமிரபரணி ஆற்றில் மிகக் கூடுதலான உபரி நீர் வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளது.&nbsp;</p><p><br></p><p>எனவே, மருதூர்மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,&nbsp; கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர&nbsp; கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள்,&nbsp; கோரம் பள்ளம் ஆறு மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு&nbsp; செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்,&nbsp; மாவட்டத்தின் மழை நீர் தேங்க கூடிய இதர தாழ்வான&nbsp; பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்&nbsp; எச்சரிக்கப்படுகிறார்கள்.</p><p><br></p><p>மேலும், மருதூர் அணைக்கட்டு, திருவைகுண்டம் அணைக்கட்டு, கோரம்பள்ளம் அணைக்கட்டு, உப்பாறு ஓடை, உப்பாத்து ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளையும்&nbsp; உன்னிப்பாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை அனைத்து துறை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</p>