<p><b>கனிமொழி எம்பி முன்னிலையில் 50 பேர் திமுகவில் இணையும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது</b>.</p><p>தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள&nbsp; கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். </p><p>நலம் ராஜேந்திரன் தலைமையில் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 50பேர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.<br></p><p>நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி செயலாளர் அந்தோனிஸ்டாலின், வழக்கறிஞர் அணி செயலாளர் மோகன் தாஸ் சாமுவேல், மாநகர திமுக-இளைஞரணி துணைச்செயலாளர் அருண்சுந்தர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் அல்பர்ட், பிரபாகர், பகுதி இளைஞரணி செயலாளர் ரவி, உட்பட பலர் உடன் இருந்தனர்.<br></p>