<p dir="ltr"><span style="font-size: 16px;"><b>ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.</b></span><br></p><p> </p><p dir="ltr"><span style="font-size:16px" ;="">மாவட்ட காவல் கண்காணிப்பாளர்&nbsp; ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன்&nbsp; மேற்பார்வையில்&nbsp; ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர்&nbsp; அன்னராஜ் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பழனிசாமி மற்றும் போலீசார் இன்று (06.12.2021) ரோந்து பணியில் ஈடுபட்டபோது&nbsp; ஸ்ரீவைகுண்டம் புதுப்பாலம் அருகில்&nbsp;&nbsp; சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த சங்கர்&nbsp; (26) த/பெ. பூல்பாண்டி, வடக்கு மாட தெரு, ஸ்ரீவைகுண்டம் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் வழிமறித்து தகராறு செய்து&nbsp; அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.&nbsp;</span><span style="font-size: 16px;">உடனே சங்கரை போலீசார் கைது செய்தனர்.</span></p><p dir="ltr"> <span style="font-size:16px" ;="">இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</span><br> <span style="font-size:16px" ;="">மேலும் மேற்படி&nbsp; சங்கர் மீது புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம்&nbsp; காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது குறிப்பிடதக்கது.</span></p>