<p><b>ஆழ்வார்திருநகரி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த காவலரின் படத்திற்கு எஸ்பி அஞ்சலி செலுத்தினார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய காவலர் சுப்பிரமணியன் கடந்த 18.08.2020 அன்று மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்தார். அவரது 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று ( ஆக.,18 )&nbsp; பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேரில் சென்று அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிரேஷ் உட்பட காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.</p>