<p><b>தமிழ்நாட்டில் வரும் ஆகஸ்டு மாதம் முதல் மழைப்பொழிவு மெல்ல அதிகரித்து தீவிரமடையும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்</b>.</p><p><br></p><p>தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி நடந்து வரும் நிலையில் வட மாநிலங்களிலும், அரபிக்கடலோர மாநிலங்களும் கனமழையை பெய்து வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் மிதமான மழைப்பொழிவை பெற்றுள்ளது.</p><p><br></p><p>இந்த மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவிய நிலையில், அடுத்த மாதம் ( ஆகஸ்டு )&nbsp; இயல்பை விட அதிக மழைப் பொழிவு இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர் . அதன்படி, முதல் 2 வாரங்களில் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும். ஆகஸ்டு 3 முதல் 15 வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது.</p><p><br></p><p>ஆகஸ்டு 18 முதல் 31ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>