<p><b>திருச்சி சிறுகனூரில் 750 ஏக்கர் நிலத்தில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுகவின் 11வது மாநில மாநாடுதான் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்து வருகிறது</b>.<br></p><p>பொதுக்கூட்டத்தில் 2 லட்சம் பேர் அமர்வதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களின் கார்.வேன், லாரிகள், பேருந்துகள் நிறுத்துவதற்காக 300 ஏக்கரில் இடம் அமைக்கப்பட்டுள்ளன.<br></p><p>காங்கிரசுடன் தொகுதிப்பங்கீட்டு இறுதி பேச்சுவார்த்தையில் இருந்த ஸ்டாலின் அதை முடித்துவிட்டு, இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமானத்தில் திருச்சி சென்றார். பொதுக்கூட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடிகம்பத்தில் கொடியேற்றி வைத்து பொதுக்கூட்டத்தினை தொடங்கிவைத்தார் ஸ்டாலின்.<br></p><p>பொதுக்கூட்டங்களில் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கட் -அவுட்கள்தான் உறுத்தலாக இருக்கின்றன என்ற பேச்சு எழுந்திருக்கிறது.<br></p><p>அதுகுறித்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், ‘’ பெரியார், அண்ணா , கலைஞர், ஸ்டாலின் படங்களை தவிர வேறு யார் படத்தையும் போடக்கூடாது என கட்சியினருக்கு உத்தரவிட்ட ஸ்டாலின் அவர்களே , திருச்சியெங்கும் உதவாத நிதியின் கட் அவுட்டுகள் மக்களின் கண்ணை உறுத்துகிறதே, மக்கள் கண்ணை மூடிகொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? ’’ என்று கேட்கிறார்.<br></p><p>’’.உங்கள் குடும்பத்தையும் மகனையும் கட்டுப்படுத்த முடியாத நீங்கள் நல்லாட்சி தரப்போகிறேன் என்பது வேடிக்கை!’’என்றும் அவர் சாடுகிறார்.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/03/07/11615132983.jpg" title="Vilasal news" style="width: 100%;"><br></p><p>எதிர்க்கட்சியினரின் விமர்சனம் இப்படி என்றால், இந்த கட் -அவுட்களை எல்லாம் பார்த்த திமுகவினர், ‘’முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்’’ என்று முழக்கமிட்டுச் செல்கிறார்கள்.<br></p>