<p><b>பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது பயனாளி விபரங்களை (e-KYC)&nbsp; உடனடியாக புதுப்பிக்க&nbsp; வேண்டும் என தூத்துக்குடி&nbsp; மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.&nbsp;</b></p><p><br></p><p>பாரத பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் எரிவாயு உருளைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. எரிவாயு உருளை இணைப்பு பெற்ற பயனாளிகள் பலர், தங்களது முதல் எரிவாயு உருளைக்கு பிறகு நீண்ட காலமாக மாற்று எரிவாயு உருளை பெறாமல் உள்ளனர்.&nbsp; இவர்களுக்கு பாரத்&nbsp; பெட்ரோலியம் நிறுவனத்திடமிருந்து தனித்தனியாக நினைவூட்டு கடிதம் அனுப்பப்பட உள்ளது.</p><p><br></p><p>எனவே இக்கடிதம் கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் பயனாளிகள் சம்பந்தப்பட்ட எரிவாயு முகவரிடம் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் தங்களது&nbsp; பயனாளி விபரங்களை (e-KYC)&nbsp; உடனடியாக புதுப்பிக்க கேட்டுக்&nbsp; கொள்ளப்படுகிறது,&nbsp; தவறும் பட்சத்தில் உஜ்வலா திட்டத்தின் கீழ் இணைப்பு&nbsp; பெற்ற பயனாளிகளின் எரிவாயு இணைப்புகள் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்,&nbsp; &nbsp;தெரிவித்துள்ளார்.</p>