<p><b>கயத்தாறு அருகே அய்யனாரூத்து துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து தான் காற்றாலைகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த துணை மின்நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர்&nbsp; ஒன்றில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்றும் வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதோடு தீ அருகே இருந்த மின்மாற்றிகளுக்கும் பரவியது.</p><p><br></p><p>இது குறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான், பாளையங்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து சுமார் 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணிகள் காலை 6 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணியை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.&nbsp; மற்ற பகுதிகளுக்கு&nbsp; தீ&nbsp; பரவாமல் இருக்க ஜேசிபி உதவியுடன் மணலை கொட்டி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.&nbsp;</p>