தூத்துக்குடிக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட மதுபாட்டில் : இளைஞர் கைது!
நிருபர்
April 11, 2025
தூத்துக்குடிக்கு ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
<p><b>தூத்துக்குடிக்கு ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நேற்று மைசூரில் இருந்து வந்த விரைவு ரயிலில் இரும்பு பாதை காவல் நிலைய போலீசார் சோதனை செய்தனர்.</p><p><br></p><p>அப்போது ஒரு பயணியின் பையை சோதனை செய்யதபோது, அதில் அவர் வெளி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.</p><p><br></p><p>விசாரணையில், அவர் சேர்வைக்காரன் மடம் மேலதெருவை சேர்ந்த வெள்ளையா மகன் முத்துக்குமார் ( 28 ) என்பதும், பெங்களூரில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.</p>