குளத்தூர் அருகே அரசு நிலத்தில் மண் திருட்டு : 5 பேர் மீது வழக்கு!
நிருபர்
April 11, 2025
குளத்தூர் அருகே வைப்பாற்றில் அரசு நிலத்தில் கனிம வள கடல் மண் திருடிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
<p><b>குளத்தூர் அருகே வைப்பாற்றில் அரசு நிலத்தில் கனிம வள கடல் மண் திருடிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் கனிமவள கருப்பு கடல் மண் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், வைப்பார் விஏஓ மாரியம்மாள், உதவியாளர் முத்துப்பாண்டி ஆகியோர் ரோந்து சென்றனர்.</p><p><br></p><p>அப்பகுதியில் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரது உப்பளத்தில் சுமார் 8 யூனிட் கடல் மண் புதிதாக கொட்டி வைத்திருந்ததை கண்டு பிடித்து விசாரித்தனர்.</p><p><br></p><p>அதில், தர்மபுரி மாவட்டம் திருமால்வாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவரது ஜேசிபி மூலம், வேம்பாரை சேர்ந்த அந்தோணி பிரான்சிஸ், முனீஸ்வரன், செவல்பட்டி ரவி ஆகியோரது டிராக்டரில் இரவு நேரத்தில் அருகில் உள்ள அரசு புஞ்சை நிலத்தில் சட்டவிரோதமாக கனிமவள மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.</p><p><br></p><p>இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீது விஏஓ மாரியம்மாள், குளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>