தூத்துக்குடியில் 94 பணியிடங்கள் இருக்கு... விண்ணப்பிக்கலாம்!
நிருபர்
March 20, 2025
அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தூத்துக்குடியில் 94 பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
<p><b>அரசு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்ப இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தூத்துக்குடியில் 94 பணியிடங்கள் இருப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</b></p><p><br></p><p>தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.</p><p><br></p><p>தமிழ்நாடு அரசு 8 போக்குவரத்து கழகங்களில் 25 மண்டலங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் <a href="http://www.arasubus.tn.gov.in" target="_blank">www.arasubus.tn.gov.in</a> என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. </p><p><br></p><p>இதில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வெளியான அறிவிப்பில், தூத்துக்குடி மண்டலத்தில் 94 இடங்கள் உள்ளது குறிப்பிடதக்கது.</p><p><br></p><p><b>பதவியின் பெயர்</b></p><p>ஓட்டுநர் உடன் நடத்துநர் </p><p><br></p><p><b>பணிக்காலியிட எண்ணிக்கை </b> (மொத்தம் 3274) </p><p><br></p><p><b>குறைந்தபட்ச வயது</b></p><p>01.07.2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். </p><p><br></p><p><b>அதிகபட்ச வயது </b></p><p>(01.07.2025 அன்று) பொது வகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர் மரவினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் (BC/MBC/DNC/SC/ST)45 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு பொது வகுப்பினர் (OC) 50 வயது பூர்த்தியாகாமலும் மற்றும் இதர வகுப்பினர் (BC/MBC/DNC/SC/ST) 55 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும். </p><p><br></p><p><b>கல்வித் தகுதி</b></p><p>பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருத்தல் அவசியம். </p><p><br></p><p><b>முக்கிய தகுதிகள் </b></p><p>செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர், உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2025-க்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும். </p><p><br></p><p><b>உயரம் மற்றும் எடை</b></p><p>உயரம் குறைந்தபட்சம் 160 செ.மீ. எடை குறைந்தபட்சம் 50 கிலோகிராம். </p><p><br></p><p><b>உடல் தகுதி</b></p><p>1. தெளிவான குறைபாடுகளற்ற (Clear Eyesight) கண் பார்வை பெற்றிருத்தல் வேண்டும். </p><p><br></p><p>2. எவ்விதமான உடல் அங்க குறைபாடுகள் (Physical Deformity) அற்றவராக இருத்தல் வேண்டும்.</p><p><br></p><p><b>கூடுதல் தகவல் </b></p><p>சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் ஓட்டுநர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் ஆகிய நிபந்தனைகள் பொருந்தாது. </p><p><br></p><p>மேலே கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து வங்கி சேவை கட்டணம் நீங்கலாக (SC / ST) பிரிவினர் ரூ.590/- (18% GST உட்பட) கட்டணமாகவும் வங்கி சேவை கட்டணம் நீங்கலாக இதர பிரிவினர் ரூ.1180/- (18% GST உட்பட) கட்டணமாகவும் செலுத்த வேண்டும். </p><p><br></p><p>விண்ணப்பதாரர்கள் முறையே எழுத்து, தேர்வு செய்முறைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். </p><p><br></p><p>விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது. </p><p><br></p><p>விண்ணப்பதாரர்கள் எழுத்து / செய்முறை / நேர்முகத் தேர்விற்கு வருவதற்கான பயணச்செலவு மற்றும் இதர செலவு தொகை ஏதும் வழங்கப்படமாட்டாது. </p><p><br></p><p> இந்நியமனம் தொடர்பாக நடத்தப்படும் எழுத்து / செய்முறை/ நேர்முகத் தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் அறிய <a href="http://www.arasubus.tn.gov.in" target="_blank">www.arasubus.tn.gov.in</a> என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். </p><p><br></p><p>இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் 21/03/2025 மதியம் 01.00 மணி முதல் 21/04/2025 மதியம் 01.00 மணி வரை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். அதன் பிறகு இணைப்பு முடக்கப்படும். </p><p><br></p><p>இதர விபரங்கள் போக்குவரத்துக் கழக பொதுப்பணி விதிகள் மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டது, தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு அதிகாரம் உண்டு. </p><p><br></p><p>சென்னை உயர்நீதிமன்ற W.P. No.20290 of 2012 நாள் 27.08.2014 மற்றும் W.A.No.. 1737 of 2014 நாள் 20.06.2019 வழக்கில் பிறப்பித்த உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. </p><p><br></p><p>தேர்வு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் மற்றும் தேர்வு நடைபெறும் இடங்கள் பற்றிய விபரங்கள் Www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தில் அவ்வப்போது பதிவிடப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் இத்தளத்தை அவ்வப்போது காணுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் </p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2025/03/20/11742446351.jpg" style="width: 100%;"><br></p>