ரேஷன் கார்டில் உங்க பெயர் இருக்கா? தூத்துக்குடி கலெக்டர் தகவல்!
நிருபர்
March 17, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் தகுதியுள்ள அனைத்து PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு ச
<p><b>பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய(eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் தகுதியுள்ள அனைத்து PHH/AAY குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் பதிவு செய்திட POS இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p><p><br></p><p>வெளியூரில் / வெளி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் இருக்கும் ஊரிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.</p><p><br></p><p>இத தொடர்பாக சிறப்பு முகாம்கள் மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று விரல் ரேகை பெறும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தங்களது விரல் ரேகை பதிவுகளை பதிவு செய்த AAY/PHH குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் 2025 முதல் அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும்.</p><p><br></p><p>எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</p>