தூத்துக்குடி அரசு அலுவலகத்தில் காத்திருக்கும் வேலை : உடனே விண்ணப்பியுங்கள்!
நிருபர்
February 18, 2025
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தொகுப்பூதியம் அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
<div align="left"><p dir="ltr"></p>
<p dir="ltr"><b>தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தொகுப்பூதியம் அடிப்படையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. </b></p><p dir="ltr"><b><br></b></p></div><p dir="ltr">குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின்கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் கூடுதலாக பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா)-Protection Officer(Non Institutional Care) பணியிடம் 1 தொகுப்பூதியம் ரூ.27,804/- என்ற அடிப்படையிலும், சிறப்பு சிறார்காவல் அலகிற்கு 2 சமூகப்பணியாளர்கள் (Social Worker) பணியிடம் ஒன்றிற்கு ஒரு மாதத்திற்கு ரூ.18,536/- என்ற அடிப்படையிலும் தொகுப்பூதியம் ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் ”மிஷன் வத்சல்யா” (Mission Vatsalya) வழிகாட்டு நெறிமுறைகளின்படி கீழ்கண்ட தகுதிகளை கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.</p><p dir="ltr"><br></p><p dir="ltr"><b>1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்சாரா) Protection Officer(Non Institutional Care) – காலிப்பணியிடம்-01</b><br></p><p dir="ltr"><br></p><p dir="ltr">அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி /சமூகவியல் /குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேம்பாடு ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">அல்லது சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் மேம்பாடு / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மன நலம் / சட்டம் / பொது சுகாதாரம் ஆகியவற்றில் 2 வருட அனுபவம் கொண்ட அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (10+2+3 அமைப்பு) . கணினியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். 14.02.2025 அன்று 42 வயதிற்குமிகாமல் இருத்தல் வேண்டும்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr"><b>2. சமூகப்பணியாளர்கள் (Social Worker)-02</b><br></p><p dir="ltr"><b><br></b></p><p dir="ltr">சமூகப்பணி(Social Work), சமூகவியல்(Sociology), சமூகஅறிவியல்(Social Science), ஏதேனும் ஒருபாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் (10+2+3 அமைப்பு) மேலும், கணினி இயக்குவதில் திறன் இருத்தல் அவசியம். 14.02.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலன் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.</p><p dir="ltr"><br></p><p dir="ltr">விண்ணப்பங்களை தூத்துக்குடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட இணையதளமான <a href="http://www.thoothukudi.nic.in" target="_blank">www.thoothukudi.nic.in</a> என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.</p><p dir="ltr"><br></p><p>
</p><p dir="ltr">பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2025 அன்று மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் வாயிலாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 176, முத்துசுரபி பில்டிங், மணிநகர், பாளை ரோடு, தூத்துக்குடி - 628 003. தொலைபேசி எண்: 0461-2331188 என்ற முகவரிக்கு கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.</p>