பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: 4 மாணவர்கள் கைது!
நிருபர்
January 05, 2025
பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம்: 4 மாணவர்கள் கைது!
<p><b>செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில், அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.</b></p><p><br></p><p>அவரை, 10ஆம் வகுப்பு பயிலும் 3 மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் ஒருவரும், கடந்த மாதம் பலாத்காரம் செய்துள்ளனர். அதை வீடியோவில் பதிவு செய்து மாணவியை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், வீடியோவை பிற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். </p><p><br></p><p>இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட 4 மாணவர்களை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.</p>