<p><b>கோவில்பட்டியில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, குக்கா் வெடித்ததில் பெண் பரிதாபமாக&nbsp; உயிரிழந்தாா்.</b></p><p><br></p><p>இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வஉசி நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் குருசாமி. இவரது மனைவி சாந்தி (47). நேற்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாராம். அப்போது, குக்கா் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது.&nbsp;</p><p><br></p><p>இதில், சாந்தி காயமடைந்தாா். அவரை குருசாமி அப்பகுதியினரின் உதவியுடன் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவா், சாந்தி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார்&nbsp; வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.</p>