<p><b>தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.</b></p><p><br></p><p><b style="color: rgb(49, 24, 115);">இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-</b></p><p><b style="color: rgb(107, 173, 222);"><br></b></p><p>2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2024 அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முத்து அரங்கத்தில் வைத்து&nbsp; நடைபெற உள்ளது.&nbsp;&nbsp;</p><p><br></p><p>எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத்,&nbsp; தெரிவித்துள்ளார்.</p>