<p><b>ஓட்டப்பிடாரம் பகுதி இந்து சமய அறநிலை துறை திருக்கோயில் நிலங்களுக்கு எல்லை கற்கள் போடும் பணி தொடங்கியது.</b><br></p><p>ஓட்டப்பிடாரம் ஆய்வாளர் சரகத்திற்கு உட்பட்ட, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டின் கீழ் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 250 ஏக்கர் நிலங்களை தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அன்புமணி மற்றும் உதவி ஆணையர் செல்வி உத்தரவின்படி , ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளரால் நடவடிக்கை எடுக்கப் பட்டு, தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப் பட்டு, திருக்கோயில் சுவாதீனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது.</p><p>மேலும் மேற்படி சரகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஒட்டப் பிடாரம் சரக ஆய்வாளர் முப்பிடாதி தலைமையில் நில அளவையர் குழுவினரால் அளவீடு செய்யப் பட்டு, தற்போது,&nbsp; இந்து சமய அறநிலையத் துறை மூலம் மேற்படி நிலங்களில் எல்லை கற்கள் நடும் பணி தொடங்கப் பட்டுள்ளது. மேற்படி நிகழ்வில் ஒப்பந்ததாரர் செல்வம், நில அளவையர் அஜித் ஆகியோர் உடனிருந்தனர்.</p>