<p><b>தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் மேலரத வீதியைச் சேர்ந்த ராஜசேகர் மகன் முனியசெல்வம் (25). இவர் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார்.&nbsp;</b><br></p><p>இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் எட்டயபுரம் நோக்கி சென்றுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் குறுக்கு சாலை பகுதியில் உள்ள தனியார் எடை நிலையம்&nbsp; அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக&nbsp; சாலையோரமாக உள்ள தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த முனியசெல்வம் சம்பவ இடத்திலேயே&nbsp; உயிரிழந்துள்ளார்.&nbsp;</p><p>இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த முனிய செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு&nbsp; மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>