வேளாங்கண்ணி மாதா கோவிலில் பிரார்த்தனை செய்தார் முதல்வர் பழனிச்சாமி
நிருபர்
December 09, 2020
வேளாங்கண்ணி மாதா கோவிலில் பிரார்த்தனை செய்தார் முதல்வர் பழனிச்சாமி
<p><b>நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் மற்றும் நாகூர் தர்க்காவில் நடைபெறும் பிரார்த்தனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.</b><br></p><p>நிவர் புயல் காரணமாக கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிபடைந்து வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பல கிராமங்கள் தத்தளித்து கொண்டு இருக்கின்றன.<br></p><p>இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.<br></p><p>கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இன்று அவர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார்.<br></p><p>இதையொட்டி இன்று காலை 8 மணி அளவில் அவர் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திற்கு வருகை தந்தார்.<br></p><p>தேவாலய பங்கு தந்தை பிரபாகரன் முதல்வரை வரவேற்றார். பிறகு தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதல்வர் பங்கேற்றார். அப்போது வேளாங்கண்ணி மாதா சொரூபம் நினைவு பரிசாக முதல்வருக்கு வழங்கப்பட்டது.<br></p><p>இதன்பிறகு நாகூர் தர்கா பகுதியில் முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர், இன்று மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல்வர் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.<br></p>