தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா கோலப்போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!
நிருபர்
August 01, 2022
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா கோலப்போட்டி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்!தூத்துக்குடி செய்திகள் Thoothukudi news local news லோக்கல் நியூஸ் online news online tamil news தமிழ் செய்திகள் தமிழ் நியூஸ்
<p><b>தூத்துக்குடியில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, கோலப்போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.</b></p><p>தூத்துக்குடியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பாலின் மகத்துவம் குறித்த கோலப்போட்டி, பாளைரோடு, மில்லர்புரம் வ.உ.சி கல்லூரி அருகே கோளரங்கம் முன்பு நடைபெற்றது. </p><p>இப்போட்டியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். </p><p>இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்ட இயக்குநர் அமுதவல்லி, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p>இந்த கோலப்போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், தூத்துக்குடி மாநகராட்சி, கல்லூரி மாணவர்கள் சார்பில் கலந்து கொண்டு கோலங்கள் வரைந்தனர்.</p><p>தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வாகனத்தில் திரையிடப்பட்ட தாய்ப்பால் வார குறும்பட ஒளிபரப்பை தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.</p>