<p><b>எட்டயபுரம் கீழரத வீதியில் அமைந்துள்ள புது அம்மன் கோவில் ஆடி மாத கொடை விழாவில் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.</b><br></p><p>&nbsp;எட்டையபுரம் கீழரத வீதி துர்க்கை அம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து புது அம்மன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து தீபாரதனை நடந்தது.&nbsp; தொடர்ந்து நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார். மாலையில் அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு முளைப்பாரி கண் திறப்பு நிகழ்ச்சியும் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு படையல் பூஜையும் நடந்தது.</p>