<p><b>சாத்தான்குளம் அருகே சாலையில் நின்ற&nbsp; பழுதான டிராக்டர் மீது அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதில் செல்போன் கடை ஊழியர் பலியானார். பழக்கடை வியாபாரி காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</b><br></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மோசஸ் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஸ்ரீ மனோ ரஞ்சித் ( வயது 20 ).இவர் சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். தினமும் ஊர் செண்று திரும்புவது வழக்கம். அதேபோல்&nbsp; அவரது பைக்கில் வீடு திரும்பினார். பன்னம்பாறை நாசரேத் செல்லும் சாலையில் அங்குள்ள சாய்பாபா கோயில் அருகே&nbsp; சாலையில் பழுதாகி நின்ற&nbsp; டிராக்டர் மீது&nbsp; ஸ்ரீ மனோ ரஞ்சித் ஓட்டி வந்த&nbsp; பைக் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர்&nbsp; சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.&nbsp;</p><p><br></p><p>அதே போல் சாத்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் பழக்கடை நடத்தி வரும்&nbsp; &nbsp;வடலி விளையை சேர்ந்த பொன் பாண்டி மகன்&nbsp; சக்திவேல் ( வயது 36 ) பணி முடிந்து அவரது பைக்கில்&nbsp; அவர் ஊருக்கு திரும்பினார். டிராக்டர் பழுதாகி நிற்பது தெரியாமல்&nbsp; டிராக்டர் மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த&nbsp; சக்திவேல் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p><p><br></p><p>இது குறித்து தகவல் அறிந்து&nbsp; சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று&nbsp; இறந்த ஸ்ரீ மனோரஞ்சித் உடலை மீட்டு&nbsp; பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில்&nbsp; சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசு ராஜசேகரன்&nbsp; இரு விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.</p>