<p><b>சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை, பள்ளக்குறிச்சி, பெரியதாழை, அழகப்பபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கான&nbsp; மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.&nbsp;</b><br></p><p>முகாமுக்கு&nbsp; இஸ்ரோ நில எடுப்பு திட்ட தனித்துணை&nbsp; ஆட்சியர்&nbsp; ஷிலா தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர்&nbsp; ஜெயபதி&nbsp; முகாமை தொடங்கி வைத்தனர். ஊராட்சித் தலைவர்கள் படுக்கப்பத்து தனலட்சுமிசரவணன், திருப்பணி புத்தன்தருவை சுலைக்காபீவி, பெரியதாழை பிரதீபா, அழகப்பபுரம் கணேசராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சுடலை வரவேற்றார்.&nbsp; சாத்தான்குளம்&nbsp; வட்டாட்சியர்&nbsp; இசக்கி முருகேஸ்வரி, சமுக பாதுகாப்பு&nbsp; திட்ட தனி&nbsp; வட்டாட்சியர்&nbsp; அற்புதமணி, பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு)&nbsp; வாசன் ஆகியோர்&nbsp; வாழ்த்துரை வழங்கினர்.&nbsp;</p><p>முகாமில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.&nbsp; நடமாடும் மருத்துவ அலுவலர் சுவிட்லீன் தலைமையிலான மருத்துவ குழுவினரின் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது.&nbsp; இதனை துணை&nbsp; ஆட்சியர்&nbsp; ஷீலா, ஒன்றியக்குழு&nbsp; ஜெயபதி, வட்டாட்சியர்&nbsp; இசக்கிமுருகேஸ்வரி உள்ளிட்டோர் பார்வையிட்டு விழிப்புணர்வு&nbsp; துண்டு பிரசுரம் வழங்கினர்.&nbsp;</p><p>முகாமில் வருவாய்த்துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை உள்ளிட்ட 20 அரசுத்துறை&nbsp; தொடர்பாக கிராம மக்கள் மனு அளித்தனர். இதில் 893 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் சுதாதார&nbsp; மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம்., சுகாதார ஆய்வாளர் மந்திரராஜன்.&nbsp; &nbsp;ஊராட்சி செயலர்கள் ராஜேஷ், ராம்குமார்,&nbsp; உள்ளிட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒன்றிய ஆணையர் சுரேஷ் நன்றி கூறினார்.</p>