தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்!
நிருபர்
September 13, 2021
தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்!
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்ப முள்ளவர்கள் 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக குறிப்பிட்ட ஆவணங்களுடன் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தெரிவித்துள் ளார்.</b></p><p>சென்னை கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளபடி, 04.11.2021 அன்று வரவுள்ள தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள்; 30.09.2021-ம் தேதிக்குள் அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் விண்ணப் பங்களைச் சமர்ப்பிக்கலாம். </p><p>1.<span style="white-space:pre"> </span>கட்டிட வரைபடங்கள் - அசல் </p><p>2.<span style="white-space:pre"> </span>கட்டிட உரிமைக்கான ஆவணம் / வாடகை ஒப்பந்தப் பத்திரம் - அசல் </p><p>3.<span style="white-space:pre"> </span>ரூ.500 அரசுக்கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு - அசல் </p><p>4.<span style="white-space:pre"> </span>அடையாள அட்டை ( பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை ) </p><p>5.<span style="white-space:pre"> </span>ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள் </p><p>6.<span style="white-space:pre"> </span>பாஸ்போர்ட் அளவு புகைப்படம் </p><p>இந்திய வெடிபொருள் சட்டம், 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் வெடிபொருள் திருத்தம் விதிகள் 2019-ன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப் பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் அவர்கள் தெரிவித்துள்ளார்.</p>