<p><b>கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்&nbsp; &nbsp;நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 811 மனுக்கள் பெறப்பட்டது.&nbsp;</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்&nbsp; ஒன்றியம் கொம்மடிக்கோட்டை ,&nbsp; நடுவக்குறிச்சி, அரசூர், தாமரைமொழி , ஆகிய ஊராட்சி பகுதி மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட&nbsp; முகாம் சாத்தான்குளம் அருகே&nbsp; கொம்மடிக்கோட்டை ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்&nbsp; வைத்து&nbsp; சனிக்கிழமை&nbsp; நடைபெற்றது.</p><p>முகாமுக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை உதவி திட்ட அலுவலர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர்கள் ராஜபுனிதா, சபிதா, தினேஷ்ராஜசிங், சாந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.&nbsp; &nbsp;ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி&nbsp; முகாமை தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை வரவேற்றார்.&nbsp; இதில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அத்வைதானந்தம், இணை செயலர் காசியானந்தம், சாத்தான்குளம்&nbsp; வட்டாட்சியர்&nbsp; இசக்கிமுருகேஸ்வரி, சமுக பாதுகாப்பு திட்ட தனி&nbsp; வட்டாட்சியர்&nbsp; அற்புதமணி, கல்லூரி&nbsp; முதல்வர் அருள்ராஜ் பொன்னுத்துரை, துணை முதல்வர் மகேஸ்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.&nbsp;</p><p>இதில் 4 ஊராட்சி பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற அனைத்துதுறை அதிகாரிகளிடம் குறை மற்றும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை,&nbsp; உரிமைத்தொகை, இலவச வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். இம்முகாமில் 811 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.&nbsp;</p><p>முகாமில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டாக்டர் சுவிட்லின்&nbsp; தலைமையிலான நடமாடும் மருத்துவ குழுவினர் மருத்துவ முகாம் நடத்தினர். மக்களைத்தேடி திட்ட பணியாளர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, பொதுமக்களுக்கு பார்த்தனர். சுகாதார ஆய்வாளர்கள் கிறிஸ்டோபர் செல்வதாஸ், மந்திரராஜன், ஜெயபால் கொண்ட&nbsp; குழுவினர் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.&nbsp; &nbsp;வேளாண்மைத்துறை, தோட்டக்கலை துறை சார்பிலும் அரசு திட்டத்தை விளக்க&nbsp; காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை&nbsp; வட்டாட்சியர்&nbsp; இசக்கிமுருகேஸவரி, ஒன்றிய ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை,&nbsp; ஒன்றியக்குழு தலைவர்&nbsp; ஜெயபதி பார்வையிட்டனர்.</p><p>இதில் தட்டார்மடம்&nbsp; உதவி ஆய்வாளர் , பொன்னு முனியசாமி,&nbsp; சுகாதார&nbsp; மேற்பார்வையாளர் பால்ஆபிரகாம்,&nbsp; ஊராட்சி செயலர்கள் அருணாதேவி, அருணாச்சலதுரை, ஆரோக்கியராஜ், துரைமுருகன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஒன்றிய&nbsp; ஆணையர் சுரேஷ் நன்றி கூறினார்.</p>