<p><b>விளாத்திகுளம் உட்கோட்டம்&nbsp; எட்டையபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எட்டையபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பல்&nbsp; தொழில்&nbsp; நுட்பக் கல்லூரியில் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றிய&nbsp; &nbsp;விழிப்புணர்வு நிகழ்ச்சி&nbsp; நடைபெற்றது.</b><br></p><p>இந்நிகழ்ச்சியில்&nbsp; விளாத்திகுளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ்&nbsp; கலந்து கொண்டு மாணவிகளுக்கு&nbsp; சாலைபாதுகாப்பு மற்றும் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு&nbsp; பற்றிய அறிவுரைகள் வழங்கினார்கள். மேலும் காவலன் sos செயலி மற்றும் posco சட்டம் பற்றிய விவரங்களை விளக்கி&nbsp; கூறினார்கள்.</p><p>இந்நிகழ்ச்சியில் எட்டையபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர்&nbsp; கலா , உதவி ஆய்வாளர் பொன்ராஜ், கல்லூரி துறைத்தலைவர் அருணா வினோதினி மற்றும் மாணவிகள் கலந்து கொண்டார்கள்.<br></p>