தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாநாடு டிஜிட்டல் பேனர்கள் கிழிப்பு!
நிருபர்
December 03, 2023
தூத்துக்குடியில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க மாநாடு டிஜிட்டல் பேனர்கள் கிழிப்பு!
<p><b>தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாநில மாநாடு நாளை( டிச 4 ) நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்காக தூத்துக்குடியில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/12/03/11701572239.jpg" style="width: 100%;"><b><br></b></p><p>தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்க 22 வது மாநில பொது குழு மாநாடு நாளை ( டிச.,4 ) தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து சங்க மாநில தலைவர் வீரமுத்து, பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் நேற்று ( 2.12.23 ) தூத்துக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, மாநாடு தொடர்பான விஷயங்கள் குறித்து பேசினர். மேலும், மாநாடு நடைபெறும் திருச்செந்தூர் சாலை மற்றும் மண்டபம் அருகில் மாநாட்டிற்காக, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பாக வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்கள் இன்று கிழிக்கப்பட்டுள்ளது. </p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2023/12/03/21701572239.jpg" style="width: 100%;"><br></p><p>இச்சம்பவம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.</p>