பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் காணும் பொங்கல் சுற்றுலா விழா
நிருபர்
January 15, 2021
பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் காணும் பொங்கல் சுற்றுலா விழா
<p><b>தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் , ஒட்டப்பிடாரம் தாலுகா, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை வளாகத்தில் வைத்து " பொங்கல் சுற்றுலா விழா 2021 " கொண்டாடப்பட்டது.</b><br></p><p>தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டை வளாகத்தில் 15.1.2021 இன்று காணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொங்கல் சுற்றுலா விழா 2021 கொண்டாடப்பட்டது.</p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2021/01/15/11610698814.jpg" style="width: 100%;"><br></p><p>வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.<br></p><p>நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன், ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலர், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.<br></p>