<p><b>தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று காலை தொடங்கியது.&nbsp;</b><br></p><p>தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்வர் பழனிசாமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அரசு மருத்துவ மற்றும் சுகாதாரப்&nbsp; பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.&nbsp;&nbsp;</p><p>இதையொட்டி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தலைமையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முதல் தடுப்பூசி மருத்துவ பணியாளர் முருகப் பெருமாள் என்பவருக்கு போடப்பட்டது.</p><p>இந்நிகழ்ச்சியில் இணைப் பேராசிரியர் டாக்டர் ராஜேஷ், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p><p><br></p>