<p><b>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை இரண்டாம் நாள், உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.<br></b></p><p>கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன், பல்வேறு கட்டுப்பாடுகளுடன், பலத்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன்&nbsp; நடைபெறும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் துவக்கி வைத்தார்.<br></p><p>போட்டியில், முதலாவதாக கோவில்காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தன. மகாலிங்கம் சுவாமி காளை, அய்யனார் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.<br></p><p>ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும் 651 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்கின்றனர்.&nbsp; காலை 8 மணிக்கு தொடங்கிய இப்போட்டி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.<br></p><p>இந்தப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் குவிக்கப்பட்டுள்ளது.<br></p><p>பார்வையாளர்களுக்கு இருபுறமும் வேலிகள் அமைத்து காளைகள் உள்ளே நுழையாமல் பாதுகாப்பு வசதிகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.<br></p><p>நிகழ்ச்சியில், சிறந்த காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசாக கார் உள்ளிட்டவைகள் வழங்கப்பட உள்ளது.&nbsp; இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.<br></p>