<p><b>திமுகவின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.</b></p><p><b style="color: rgb(156, 0, 0);">இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,</b></p><p>திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வரும் அப்துல் வகாப் அப்பொறுப்பிலிருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக டி.பி.எம்.மைதீன்கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, மாநகர நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமெ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>