<p><b>புரட்டாசி மாத மகாளய அமாவாசையயை முன்னிட்டு, எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏழை எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.</b></p><p>நாம் இந்த உலகிற்கு வர முக்கிய காரணமாக இருந்த நம் முன்னோர்களை ஒரு போதும் மறக்கக் கூடாது. நமது வாழ்நாளில் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று, பிதருக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள்.</p><p>அமாவாசை தர்ப்பணத்தை பொறுத்தவரை, மாதம் மாதம் வரும் அமாவாசையில், தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.</p><p>மகாளய அமாவாசை தினத்தில் எறும்பு, காகம், நாய், பூனை, பசு மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்தால் கடவுளின் ஆசியும், முன்னோர்களின் ஆசியும் ஒரு சேர கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.</p><p>அந்த வகையில், மகாளய அமாவாசையயை முன்னிட்டு, எட்டையபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஏழை எளிய முதியோர்களுக்கு உணவு வழங்கினார்.</p>